புத்தாண்டு கொண்டாட்டங்களின் பலன்... 70 சாலை விபத்துகள்.. நான்கு பேர் பலி!
சென்னை: இந்த 2014 புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விருந்து, நடன விருந்து, சாலைகளில் ஆர்ப்பரிப்பு என மக்கள் கட்டுக்கடங்காமல் கொண்டாடியதில் 70 இடங்களில் சாலை விபத்துகள் நேர்ந்தன.
இந்த விபத்துகள் அனைத்தும் சென்னை நகரில் நடந்தவை மட்டுமே. மாநிலம் முழுவதிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 70 விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கோட்டூர்புரம், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, தியாகராய நகர் போன்ற பகுதிகளில் அசாதாரண போக்குவரத்து நிலவியது.
வாகனங்கள் பல இடங்களில் ஸ்தம்பித்தன. இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுவருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது என சாலை விதிகள் இருந்தாலும், இதைக் கண்காணிக்க பல ஆயிரம் காவலர்கள் பணியில் இருந்தாலும், பல வாகன ஓட்டிகள் குடித்திருந்தனர். அண்ணா சாலையில் நிலை தடுமாறி நோ என்ட்ரியிலேயே வாகனங்களை கத்திக் கொண்டே ஓட்டிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.
புனித தோமையார் மலைப் பகுதியில் பணியிலிருந்த ஒரு காவலர் போதையில் தடுமாறியபடி வாகன ஓட்டிகளை திட்டி, மிரட்டிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications