ஆரோக்கிய படிப்பு... காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்!
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 06.06.2016 அன்று 6 முதல் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காரைக்குடி நகராட்சி ஆணையாளர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கணித பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி ஆணையாளர் அவர்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து எடுத்துக் கூறினார்.

மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் குடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 33 வது வார்டு கவுன்சிலர் ரவி, சித்த மருத்துவர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் பலரும் கலந்து கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications