நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவின் 2-ம் கட்ட விசாரணை நிறைவு
புத்தாக்க பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான 2-ம்கட்ட விசாரணையை அதிகாரி சந்தானம் நிறைவு செய்தார். இந்நிலையில் புத்தாக்க பயிற்சியில் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் இன்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை அதிகாரியான சந்தானம் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன், மற்றும் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் முன்னாள் பதிவாளர் விஜயன் மற்றும் மாணவர்களிடையேயும் நேற்று நேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பல்கலை புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் இன்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த குமாரராஜன் மற்றும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர் செல்வராஜ் ஆகியோரை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், அதன் அறிக்கையினை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications