நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவின் 2-ம் கட்ட விசாரணை நிறைவு
புத்தாக்க பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான 2-ம்கட்ட விசாரணையை அதிகாரி சந்தானம் நிறைவு செய்தார். இந்நிலையில் புத்தாக்க பயிற்சியில் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் இன்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை அதிகாரியான சந்தானம் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன், மற்றும் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் முன்னாள் பதிவாளர் விஜயன் மற்றும் மாணவர்களிடையேயும் நேற்று நேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பல்கலை புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் இன்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த குமாரராஜன் மற்றும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர் செல்வராஜ் ஆகியோரை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், அதன் அறிக்கையினை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications