ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு திமுக ரூ1 கோடி அள்ளி கொடுத்ததன் பரபர பின்னணி!
ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு நிதி அளிக்க வழிமுறைகளை சொல்லுங்கள், மற்ற அறிவுரைகள் தேவையில்லை என்று எதை பற்றியும் ஸ்டாலின் கவலை கொள்ளாமல் நிதி அளித்ததை தமிழ் ஆர்வலர்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.
Recommended Video

சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு நிதி அளித்தால் ஆடிட்டிங்கில் சிக்கல் வந்து விடும் என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், துணிந்து வந்து ரூ1 கோடியை வாரி வழங்கியவர் மு.க.ஸ்டாலின் என்று தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர். மேலும் இந்த அறிவிப்பை தந்தை வழியில் ஸ்டாலின் ஆற்றிய தொண்டாகவே தமிழ் ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.
அமெரிக்காவில் மாசசூஸெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் உலகின் மூத்த மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் தமிழுக்கென ஒரு இருக்கை அமைய வேண்டும் என அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
ஏற்கெனவே மற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் இருக்கைக்கென ரூ 40 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறிவிட்டது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்
இந்தப் பணிக்காக மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞான சம்பந்தம் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்துத் தொடங்கிவைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

தொய்வு
இதுதவிர, தனிநபர்களும் தமிழ் இருக்கைக்காக நிதியை வாரிக் கொடுத்தனர். சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, தமிழ் இருக்கைக்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார் ஜெயலலிதா. அடுத்து வந்த நாட்களில் அவர் இறந்துவிட, தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழக அரசின் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றனர் புலம்பெயர் தமிழர்கள். இதனையடுத்து, பத்து கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கை கொடுத்தார் ஸ்டாலின்
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் தமிழ் இருக்கைக்கான பணிகளைத் தொடங்க இருந்தனர் அமெரிக்காவாழ் தமிழர்கள். ஆனால், இன்னும் 2 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. நேற்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒரு கோடி ரூபாய் அறிவிப்பைக் கொண்டாடுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். அமெரிக்காவாழ் தமிழர் ஒருவரிடம் பேசினோம். " ஸ்டாலின் செய்த உதவி சாதாரணப்பட்டது அல்ல. இதற்கான முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர் மருத்துவர் ஜானகிராமன். தி.மு.க தலைமையின் கவனத்துக்கும் அவர்தான் கொண்டு சென்றார்.

ஆடிட்டிங் பிரச்சினை
திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி, புலம்பெயர் தமிழர் கால்டுவெல் ஆகியோரும் தி.மு.க தலைமையிடம், தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கி வந்தனர். அரசியல் கட்சியிடம் இருந்து நிதி செல்வதால், ஆடிட்டிங் உள்ளிட்டவைகளில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்ற விவாதம்தான் தி.மு.க தலைமையிடம் இருந்து வந்தது. இதன் காரணமாகவே, நிதி அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
இதனை விரும்பாத ஸ்டாலின், ' நிதி அளித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்கான வழிமுறைகளை மட்டும் விளக்குங்கள். வேறு எந்த அறிவுரையும் தேவையில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். இதன்பின்னர், ஹார்வர்டு நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நடைமுறைகளைக் கேட்டறிந்தனர். தி.மு.க அளித்த உதவியால் ஹார்வர்டில் ஓரிரு மாதங்களில் தமிழ் இருக்கை அமைய இருக்கிறது.

தமிழர்கள் பாராட்டு
திருவள்ளுவர் சிலை, தமிழ் செம்மொழி உள்பட தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி. அவருடைய வழியிலேயே அவருடைய தனயனும் பயணிப்பதை புலம்பெயர் தமிழர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். இப்படியொரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை" என்றார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications