நதிநீர் தீர்ப்பாயத்துக்கு எதிர்ப்பு- காவிரி வழக்குகளை மாற்ற கூடாது: மத்திய அரசுக்கு எடப்பாடி கடிதம்
நிரந்தர நதி நீர் தீர்ப்பாயம் தேவை இல்லை என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் தேவை இல்லை என மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கு இடையேயான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மைகளை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நீரை பகிர்ந்து கொள்ள ஏற்படும் அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண ஒரே நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதைத் திசை திருப்பும் வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் கூறுகையில், நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் தேவை இல்லை. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைபோல் நதிநீர் வழக்குகளை அணுகக் கூடாது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படியே காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவில்லாமல் காவிரி வழக்குகளை புதிய அமைப்புக்கு மாற்றக்கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மைகளை கொண்டது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications