தமிழகத்தில் புதிய மின் திட்டங்களும் இல்லை, பிறகு எப்படி வந்தது கூடுதல் கரண்ட்?.. தமிழிசை கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் புதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பரபரப்பு நிலவி வருகின்ற நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பங்களிப்பும் ஒரு காரணம். புதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. பிறகு எப்படி கூடுதல் மின்சாரம் வந்தது. மத்திய அரசு தந்த மின்சாரம்தான் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் போனதற்குக் காரணம்.
ஆனால் மத்திய அரசு மீது தமிழக அரசு பழி சுமத்துகிறது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள யாரும் மக்களின் ஆதரவைப் பெறப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications