For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதெல்லாம் பிரதமருக்கு யாரும் கறுப்புக் கொடி காட்ட முடியாது.. தமிழிசை சவால்

தமிழகம் வரும் பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது

    திருவண்ணாமலை : தமிழகம் வர இருக்கும் பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போராடி வருகின்றன.

    No one able to show Black flag to CM Says Tamizhisai

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழுவில் ஏப்ரல் 5ம் தேதி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும், ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இன்று திருவண்ணாமலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித பாரபட்சமும் காட்டவில்லை.

    நீதிக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது. எனவே, தமிழக எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழகம் வரும் பிரதமருக்கு யாரும் கறுப்புகொடி காட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    No one able to show Black flag to CM Says Tamizhisai. Tamilnadu State BJP Leader Tamizhisai Sowderarajan says that, Central Government is not favouring anyone on Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X