'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி மும்முரம்!!
சென்னை: சிதம்பரம் கடல் பகுதியில் மாயமான விமானத்தை 'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' நவீன உதவியுடன் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. இதனை இயக்கிய விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல் படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

விமானம் மாயமாகி 20 நாட்கள் ஆகிறது. மாயமான விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில் 12 இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் 6 கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மாயமான விமானிகளின் குடும்பத்தினரும் பிச்சாவரம் பகுதியில் சென்று தேடுதல் வேட்டையை பார்த்து வந்தனர். இந்தநிலையில் இன்று முதல் சீஸ்மெட்டிக் எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நவீன வசதிகள் கொண்ட சாகர்நிதி மற்றும் ஒலிம்பிக் கேன்யான் கப்பல்களால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த கப்பல்கள் தேடும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. சோனா சிஸ்டம் என்ற நவீன கருவிகள் மூலம் ஒளியை கடலில் பாய்ச்சி மாயமான விமானத்தில் இருந்து தகவல்கள் வருகிறதா? என்பது குறித்து பார்க்கப்பட்டது.
ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தற்போது அதிநவீன தொழில்நுட்பமான சீஸ் மெட்டிக் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்ப திட்டம் மூலம் சிக்னல் விட்டுவிட்டு வரும் பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications