'ஜெயலலிதாவுக்கு கொடுத்தால் நோபல் பரிசுக்கே பெருமை' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே வழங்கப்படும் பெருமை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும பெருமை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு வழங்குவதற்கான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தந்தி தொலைக்காட்சியில் அதன் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். அப்போது அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான கேள்விகளை கேட்டார்.

அவற்றில் ஒன்றான, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் நபருக்குதான் நோபல் பரிசு வழங்கப்படும் என தெரியாதா என பாண்டே கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும் பெருமை என்று அவர் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் நோபல் பரிசு வழங்குவதற்கான சட்ட திட்டங்களை, பரிசு வழங்கும் நாடுகள் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோன்று தேசிய விவசாயிகள் நாள் குறித்தும் நெறியாளர் பாண்டே கேள்வி எழுப்பினார். அதற்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மழுப்பலாக பதில் அளித்தார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications