சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை- வடகிழக்கு பருவமழை 66% குறைவு
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 66% குறைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலைமையம் கூறியுள்ளது.
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை வரலாறு காணத அளவிற்கு பெய்து சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இந்த ஆண்டு மழையே பெய்யாமல் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நாடா புயலும் வலுவிழந்து வெறுமனே கரையைக் கடந்தது. நவம்பர் மாதம் மழையே பெய்யாமல் கடந்த நிலையில் டிசம்பர் மாதமும் 12 தேதியான நிலையில் சாதாரண சாரல் மழை கூட சென்னையில் பெய்யவில்லை.
கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் அதாவது 676.1 மி.மீ. அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்து போன மழை
கடந்த 45 ஆண்டுகளில் 1974 மற்றும் 1995ம் ஆண்டுகளில்தான் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட மிகக் குறைவாக பெய்துள்ளது. 1974ம் ஆண்டில் சராசரி மழையைவிட 34 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்பது வானிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.

வானிலை எச்சரிக்கை
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயலானது வலுவிழந்துள்ளதாக கூறினார். விசாகப்பட்டினத்துக்கு 990 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ள வர்தா புயல் வருகிற டிசம்பர்12 ஆம் தேதி வலுவிழந்த நிலையில் நெல்லூர்-காக்கிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை பெய்யாது
சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை, எனினும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்று வேகமாக வீசும் காரணத்தால் மீனவர்கள் ஆந்திரப் பகுதியோரம் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்து போன மழை
இயல்பைவிட 66% பருவமழை குறைந்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 1974ம் ஆண்டு போல கடும் வறட்சி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications