சுவாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்!
சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கேமிரா பொருத்த ஒருவருடமாகியுள்ளது. எனினும் அவை இன்னும் வேலை செய்யவில்லை.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பரபரப்பான குற்றங்கள் நடந்தவுடன் காவல்துறை விழித்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். ஆனால், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி பொறியாளர் சுவாதி பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஒருவருடமாகியும் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படவில்லை என்று பணிக்குச் செல்லும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் தேதியன்று ரயிலுக்காக காத்திருந்த சுவாதி வெட்டிகொலை செய்யப்பட்டார். சிசிடிவி கேமிராக்கள் அங்கு இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் திணறிவந்தனர். பிறகு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார்தான் குற்றவாளி என்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரும் மின் கம்பியைக்கடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் நிறைவு அறிக்கை தாக்கல் செய்து மூடு விழாவை போலீசார் செய்துவிட்டனர்.

பணம் ஒதுக்குவதில் சிக்கல்
ஆனால், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு விமோச்சனம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், ரயில்வே துறை மற்றும் ரயில்வே போலீசார் இடையில் யார் பணம் செலவிடுவது என்ற மோதலில் எதுவும் நடக்கவில்லை.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
பொருத்தப்பட்ட ஒரு கேமிராவையும் பணம் கொடுக்காததால் ஒப்பந்ததார் கழட்டிச்சென்றார். தற்போது மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கேமிரா பொருத்தும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. விரைவில் சிசிடிவி கேமிராக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

முறையாக நிதியை பெறவில்லை
இதில், கொடுமை என்னவென்றால், பெண்கள் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிராக்கள் பொருத்த மத்தியரசு நிர்பையா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், மாநில அரசு முறையாக அந்த நிதியை பெற்று திட்டமிட்டு செலவு செய்ய தவறிவிட்டது என்று மகளிர் உரிமை செயற்பாட்டளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

யார் கடமை?
பாதுகாப்பு ரோந்து செல்வது மட்டும்தான் எங்களின் கடமை என்கிறார்கள் இருப்பு பாதை ரயில்வேதுறையினர். குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் எங்கள் கடமை என்கிறார்கள் மாநில ரயில்வே போலீசார். பாதுகாப்பு கருவிகளை பொருத்தி தரவேண்டியது ரயில்வே துறையின் கடமை என்கிறார்கள் காவல்துறையினர்.

விழிக்குமா போலீஸ்
"நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை, விரைவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்நிலையங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும்" என்கிறார் மூத்த ரயில்வே அதிகாரி.அடுத்த அசம்பாவிதம் நடக்கும் முன்பு ரயில்வே துறை, காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications