அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்... மு.க.ஸ்டாலின் சூளுரை
ஆரணி : தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியின் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது..

வரும் சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். சிலர் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நான் பதில் கூறமுடியாது.
உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் படித்த பட்டப்படிப்புகளை பிற்படுத்தப்பட்ட மக்களும், அடித்தட்டு மக்களும் படிக்க காரணம் திமுகதான். ஏன் அடித்தட்டு மக்களும் அமைச்சர்களாக வருவதற்கு காரணம் திமுகதான். பலர் திமுகவை ஒழிக்க அலைந்துகொண்டிருக்கின்றனர். செயலற்ற ஆட்சி, துருபிடித்த ஆட்சியை அகற்றும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்கும்.
கோட்டைக்கே வராத முதல்வராக ஜெயலலிதா உள்ளார். கோட்டைக்கு அவர் வருவதே செய்தியாக உள்ளது. இப்படிப்பட்ட ஆட்சியை வரும் தேர்தல் அகற்றும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications