விஜயகாந்துக்கு அறிக்கை எழுதி தரும் பேரா. ரவீந்தரனும் எஸ்கேப்... திமுகவில் ஐக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவின் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி செயலரும் அம்பத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவருமான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

தேமுதிக தொடங்கப்பட்டபோது அக்கட்சி அவைத் தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர்தான் விஜயகாந்துக்கு ஆலோசகராக, அறிக்கைகள் எழுதி தருபவராக இருந்தார்.

One more DMDK functionary joins DMK

பின்னர் அவர் தேமுதிகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானார். தற்போது சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேமுதிகவின் பெரும்பாலான மாவட்ட செயலர்கள் அதிமுக, திமுகவுக்கு தாவி வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிகவின் பட்டதாரி ஆசிரியர் அணி செயலரும் அம்பத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவருமான பேராசிரியர் ரவீந்தரன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இதனால் விஜயகாந்துக்கு இனி அறிக்கைகளை யார் எழுதித் தருவார்? என்ற கேள்வி அக்கட்சியில் எழுந்துள்ளது. இதனிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் என்.ஆஸ்டின் தலைமையில் மேற்கு நெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.மோசஸ் சந்திரா, குருந்தன்கோடு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே.சத்தியதாஸ், கல்லுக்கூடம் இளைஞர் அணி அமைப்பாளர் ஜே.ஜெயா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி.குமார், குருந்தன்கோடு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.விஜயன் ஆகியோரும் தி.மு.க.வில் நேற்று இணைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+