நன்றாக சோறு சாப்பிடுபவர்.. டி.டி.வி.தினகரனை கலாய்க்கிறாரா நாஞ்சில் சம்பத்?
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நன்கு சாப்பிடுபவர் என்ற அர்த்தத்தில் நாஞ்சில் சம்பத் பேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக வாசகர் கண்டறிந்து கமெண்ட் வெளியிட்டுள்ளார்.
சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
திராவிட இயக்கத்தின் திருப்பத்திற்கும், விருப்பத்திற்கும் உரிய வரலாற்று சிறப்பு மிகுந்த மயிலை மாங்கொல்லையில் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நேற்று ஆற்றிய உரை கழக தோழர்களுக்கும் அம்மாவின் பக்தர்களுக்கும் களிப்பையும் கரைகாணா உற்சாகத்தையும் தந்து விட்டது. மதிப்பிற்குரிய டிடிவி தினகரன் அவர்கள் வீரன் , தின்னியன், தின்தோள் மறவன் என்பதை நிரூபித்து விட்டார் என கூறியிருந்தார்.

இந்த செய்தியை நமது 'ஒன்இந்தியாதமிழ்' வெளியிட்டிருந்தது. அதற்கு மயில் என்ற பெயரில் ஒரு வாசகர் கொடுத்த கமெண்ட் டாப் ரகம்.
அவரது கமெண்ட்டை பாருங்கள்: இதுல திண்ணியன் திண்தோள் மறவன் என்று இருக்க வேண்டும். இந்த இன்னோவா சம்பத் என்ன தமிழ் படிச்சார்?
தின்னியன் = நன்றாக சோறு தின்னுபவர். தின் என்ற தனி வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் உண்டு. thin தோள் மறவன் = மிக மெலிய தோள் (சொங்கி) மறவன் என்று அர்த்தம்.
இவ்வாறு கூறுகிறது அந்த கமெண்ட். தின்னியன் என்றால் நன்றாக சோறு சாப்பிடுபவர் என்ற பொருளை தந்துவிடும் என்று கூறுகிறது இந்த கமெண்ட்.
நாஞ்சிலாரே, தினகரனை நீங்கள் ஏதும் கலாய்த்து இந்த பதிவை போடவில்லையே?












Click it and Unblock the Notifications