கொந்தளிப்பில் கதிராமங்கலம்... உழவன் திரண்டால் உங்கள் உடுக்கையும் மிஞ்சாது!

கதிராமங்கலம் கிராமத்தையும், மக்களையும் காக்க வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணெய் கிணறு தோண்டியதால் நிலத்தடி நீர்மட்டம் பாழாகி விட்டது. பச்சை வயல்களும் பற்றி எரிகின்றன. எங்கள் கிராமங்களை காப்பாற்றுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் வெள்ளிக்கிழமை எண்ணெய் கசிவு ஏற்பட்டது. திடீரென பற்றி எரிந்தது. பதற்றத்தோடும், அச்சத்தோடும் போராடிய மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.

கதிராமங்கலத்தின் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு குமுறியுள்ளனர். அவர்களின் குமுறல்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளோம்.

எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்

அதிகாரம் அதிகாரம் என்று சர்வாதிகள் பண்றீங்களே... நாட்டை வெள்ளைக்காரனுக்கு வாடகைக்கு விடப் போறீங்களா? என்று கொந்தளிப்போடு பதிவிட்டுள்ளார் இவர்.

ஏளனம் செய்யவேண்டாம்!

ஏழ்மை என்ற எண்ணம் கொண்டு ஏளனம் செய்யவேண்டாம்! தரணியெங்கும் திரண்டிருக்கும் உழவன் திரண்டால் உனக்கு உடுக்கை மிஞ்சாது நயவஞ்சகனே

கிராமத்தின் பாதுகாப்பு

நம் நாட்டின் சுதந்திரத்தை மீட்க ஆங்கிலேயர்களிடம் போராடினோம் நம் "கிராமத்தின்"பாதுகாப்பை மீட்க "இந்தி"யர்களிடம் போராடிகிறோம்

காலனிடம் விவசாயி

காலனின் குறிப்பறிந்து விளைச்சல் கண்டவன் மாறி வரும் கலியுகத்தில் மீத்தேன் திட்டங்களால் விவசாய வளர்ச்சி காணாமல் இன்றைய விவசாயி! என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+