கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!
கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம்: கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓபிஎஸ் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்.

தனக்கு பின் இவர்தான் பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதா யாரையும் அவர் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்காது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.
சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு பாடமாக அமையும். கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications