ஆர்.கே.நகரில் யார் போட்டி.. ஓ.பி.எஸ்ஸின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அவசர ஆலோசனை!

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் இன்று மாலைக்குள் தேர்தல் குறித்து ஓபிஎஸ் அணி முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பாரர்க்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் அணி உள்ளது.

OPS conducting emergency meeting with his supporters

தேர்தல் பணிகளில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆர்கே.நகர் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலைக்குள் ஓபிஎஸ் அணி ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+