ஆர்.கே. நகரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாது - ஸ்டாலின்
ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுக ஜெயிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து 89 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
தற்போதைய இடைத் தேர்தலில் அது போன்று முறைகேடுகள் நடக்க கூடாது என தேர்தல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

தேர்தலை தள்ளி வைத்தது ஏன்?
அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ், 'இரண்டு தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் என முன்பு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தெரிவித்து இருந்தனர். எனவே, அரசுக்கு சார்பாக தேர்தல்ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய அரசு இவர்கள் சொல்வதை கேட்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்தானது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

டெபாசிட் வாங்காது
ஆர்.கே. நகரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து என்னதான் வாக்குறுதி அளித்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும், உருண்டு புரண்டாலும் அதிமுகவினால் டெபாசிட் கூட வாங்க முடியாது.

ஆளுக்கு ஒரு கணக்கு
காணாமல் போன மீனவர்கள் மீட்பு குறித்து, அமைச்சர், தலைமை செயலர், ஆட்சியர் வேறு வேறு எண்ணிக்கையை கூறுகின்றனர். மீனவர் பிரச்னையில் ஒவ்வொருவரும் ஒரு கணக்கு சொல்கின்றனர். நாளை குமரியில் தி.மு.க., மீனவர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்க உள்ளது. அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். ஆளுநரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் பிரச்சாரம்
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17ம் தேதி இருந்து 19ம் தேதி வரை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் அனல் அதிகரிக்கும்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications