வதந்திகளை நம்ப வேண்டாம்.. மீன்களில் ரசாயன கலப்பு இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் மீன்களில் எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மீன்களில் எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காசிமேட்டில் மனித உடலை பதப்படுத்தும் பார்மலின் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீன் விற்பனையும் பெரிய அளவில் குறைந்தது. காசிமேடு மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த புகாரில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றுள்ளார்.
தமிழகத்தில் மீன்களில் ரசாயன கலப்பு இல்லை. பார்மலின் போன்ற எந்த ரசாயனமும் மீன்களில் கலக்கப்படவில்லை. ஐஸ்கட்டிகளை மட்டுமே பதப்படுத்த பயன்படுத்துகிறோம்.
மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். யாரும் மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாக இருக்கிறது. இது வதந்தி என்பதை மக்கள் உணர வேண்டும்.

மீன் மிகவும் நல்ல ஆரோக்கியமான உணவு. மீன் உணவு உடலில் பல நோய்களை குணப்படுத்தும். மீன் இதயத்திற்கு நல்லது. மக்கள் எல்லோரும் மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலை.யில் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications