பாபநாசம் அணைக்கு இப்படி ஒரு சோதனையா?: மக்கள் தவிப்பு
நெல்லை: நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் இதுவரை கண்டிராத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வறட்சி நிலைக்கு செல்கிறது. தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாததால் அணைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீரை கொண்டு கார்பருவ சாகுபடி தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில பயிர்கள் கருகின.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வெயில் கோடை போல் கொளுத்தி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக 102 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இதனால் அணைகள் மற்றும் குளங்களில் மிச்சம் மீதி இருக்கிற தண்ணீரும் வேகமாக வற்றி வருகிறது.
அதிலும் மாவட்டத்தில் வற்றாத அணையாக கருதப்படும் பாபநாசம் அணைக்கு இந்த தடவை பெருத்த சோதனை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் கூட இந்த அணையில் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது பாலைவனம் போல் மாறிவிட்டது.
143 அடி கொள்ளவு கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அணை தற்போதைய நிலையில் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதில் உள்பகுதியில் இதுவரை பார்த்திராத காட்சிகள் தெரிகின்றன. பாபநாசம் அணையில் சுமார் 20க்கும் மேற்பட்ட முதலைகள் தண்ணீர் இல்லாமல் உயிரை காப்பாற்ற போராடுகிறதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலும் புலி, சிறுத்தை, யானை, மான் போன்ற விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் திரிந்து வருகின்றன. இந்த திடீர் சோதனையால் பொதுமக்கள் திணறிப் போய் உள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications