பாபநாசம் அணைக்கு இப்படி ஒரு சோதனையா?: மக்கள் தவிப்பு
நெல்லை: நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் இதுவரை கண்டிராத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வறட்சி நிலைக்கு செல்கிறது. தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாததால் அணைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீரை கொண்டு கார்பருவ சாகுபடி தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில பயிர்கள் கருகின.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வெயில் கோடை போல் கொளுத்தி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக 102 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இதனால் அணைகள் மற்றும் குளங்களில் மிச்சம் மீதி இருக்கிற தண்ணீரும் வேகமாக வற்றி வருகிறது.
அதிலும் மாவட்டத்தில் வற்றாத அணையாக கருதப்படும் பாபநாசம் அணைக்கு இந்த தடவை பெருத்த சோதனை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் கூட இந்த அணையில் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது பாலைவனம் போல் மாறிவிட்டது.
143 அடி கொள்ளவு கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அணை தற்போதைய நிலையில் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதில் உள்பகுதியில் இதுவரை பார்த்திராத காட்சிகள் தெரிகின்றன. பாபநாசம் அணையில் சுமார் 20க்கும் மேற்பட்ட முதலைகள் தண்ணீர் இல்லாமல் உயிரை காப்பாற்ற போராடுகிறதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலும் புலி, சிறுத்தை, யானை, மான் போன்ற விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் திரிந்து வருகின்றன. இந்த திடீர் சோதனையால் பொதுமக்கள் திணறிப் போய் உள்ளனர்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications