சேலம் ஏர்போர்ட்டில் பாராசூட் விரியாமல் போனதால் பெங்களூர் பெண் தரையில் விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ரம்யா(26). அவரது கணவர் வினோத்(28). கணவன், மனைவி உள்பட 10 பேர் இந்தியா ஸ்கைடைவிங் பாராசூட் அசோசியேஷன் மூலம் பயிற்சி பெற்று வந்தனர்.
இன்று மதியம் 1 மணிக்கு அவர்கள் கிளைடர் பயிற்சி விமானம் மூலம் சேலம் வந்தனர். கமலாபுரம் விமான தளத்தை அடைந்த அவர்கள் பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அப்போது ரம்யாவின் பாராசூட் மட்டும் விரியவில்லை. இதனால் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ரம்யா தரையில் விழுந்து பலியானார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் பாராசூட் விரியாமல் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications