அம்மா குடிநீருக்கு போட்டி: ரயில் நிலையங்களில் 1 லிட் குடிநீர் 5 ரூபாய்க்கு கிடைக்கும்
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பேருந்து நிலையங்களில் ரூ.10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்து வருகிறது. இதே போல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ.5க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்ய உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
முதற்கட்டமாக மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் ரயில் பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏற்றவாறு புதிய தண்ணீர் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிநீரை, ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் ரூ.5க்கு விற்பனை செய்துவரும் திட்டத்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் பயணத்தின் போது குடிநீரை, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களிலோ அல்லது கடைகளில் அதிக விலை கொடுத்தோதான் பெற வேண்டிய நிலை இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்துவரும் ரயில் நீரின் விலை ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது தனியார் நிறுவன குடிநீரின் விலைக்கு இணையாகவே இருக்கிறது.
இந்த நிலையில், மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் ரயில் பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏற்றவாறு புதிய தண்ணீர் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தை அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 7000 தண்ணீர் இயந்திரங்களை அமைக்க ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.
மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 7 தண்ணீர் இயந்திரமும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 தண்ணீர் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications