நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் இருக்கும் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக காவல்துறை உலகத்தரம் வாய்ந்தது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவலர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் உதவி காவல் ஆய்வாளர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஓராண்டு வழங்கப்பட்டது. முதன்முறையாக இந்த ஆண்டு சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பயிற்சி பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பை ப்ரித்திகா யாஷினி பெற்றுள்ளார்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பயிற்சியை தொடங்கிய இவர்கள், தங்களின் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். ஓராண்டு பயிற்சி பெற்ற இவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிமயர்த்தப்படுவார்கள்.

முதல்வர் பாராட்டு
உதவி காவல் ஆய்வாளர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார். பயிற்சியை நிறைவு செய்த உதவி காவல் ஆய்வாளர்களை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தி பேசினார்.

உலகத்தரம் வாய்ந்தது
தமிழக காவல்துறை உலகத்தரம் வாய்ந்தது. அது மேலும் வளர்ச்சியடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறிய முதல்வர் பழனிச்சாமி, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் காவல்துறையினரின் பங்கும் அர்ப்பணிப்பு உணர்வும் அதிகரித்து விட்டதாக கூறினார்.

முதல் திருநங்கை
உதவி காவல் ஆய்வாளராக திருநங்கை ஒருவர் பயிற்சி பெற்றுள்ளதற்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க பாடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வளம் வளர்ச்சி
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் அமைதி நிலவும், அமைதியின் மூலம், வளமும் வளர்ச்சியும் சீராக இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications