ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள்: ஞானி
சென்னை: ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள் என்று ஆலந்தூர் சட்டசபை வேட்பாளர் ஞானி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஞானி போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கை பதிவு செய்த பிறகு அளித்த பேட்டி: ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அலை உள்ளது, ஆனால் அது மவுன அலை.
பிற கட்சியினரைப்போல ஆர்ப்பரிக்கும் அலை இது கிடையாது. எங்களுக்கு ஆர்ப்பரிப்பதில் விருப்பமும் கிடையாது. மக்கள் வெளியில் தெரியாமலே எங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு மவுன புரட்சியே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சிறிய அளவு அதிகாரங்களே எஞ்சியுள்ளன. அந்த அதிகாரத்தில் ஒன்றுதான் 144 தடையுத்தரவு. கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதே என்று வருத்தப்படாமல் நாம் நேர்மையாக இருப்பதற்காக அந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும்.
பணம் கொடுப்பதும், அதை பெற்றுக் கொண்டு வாக்களிக்கவும் நமது மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தாங்களாக முன்வந்து திருந்தினால் இதுபோன்ற தடையுத்தரவுகளுக்கும் அவசியம் இருக்காது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications