மதுரை கிரானைட் முறைகேடு... இனி சென்னையிலும் புகார் அளிக்கலாம்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் சென்னை மற்றும் மதுரையில் புகார் அளிக்க வேண்டிய முகவரியை வெளியிட்டுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த புதன்கிழமை மதுரைக்கு வந்து சேர்ந்த சகாயம், முதலில் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்தும் சகாயம் புகார் மனுக்களை பெற்றார். முதல் கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சகாயம், கிரானைட் முறைகேடு தொடர்பாக புகார் மனுக்களை தொடர்ந்து அளிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான புகாரினை இனி மதுரை மட்டுமல்லாது, சென்னையிலும் அளிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரானைட் முறைகேடு தொடர்பான புகார் அளிக்க விரும்புபவர்களின் வசதிக்காக சென்னையிலும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். அறிவியல் நகரம், காந்தி மண்டபம் சாலை, கோளரங்க வளாகம், சென்னை 25 என்ற முகவரியில் புகார் மனுக்கள் பெறப்படும்.
மதுரையில் புகார் அளிக்க விரும்புபவர்கள் பூமாலை வணிக வளாகம், காந்தி நகர், மதுரை 20 என்ற முகவரியிலும் அளிக்கலாம் என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications