For Daily Alerts
Just In
விழுப்புரத்தை பிரித்து "உளுந்தூர்பேட்டை" தனி மாவட்டம் கோரி முழு அடைப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து உளுந்தூர்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் கோரி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமாக இருப்பது உளுந்தூர்பேட்டை.
தற்போது விழுப்புரத்தின் மேற்குப் பகுதிகளை பிரித்து உளுந்தூர்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று உளுந்தூர்பேட்டையில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனால் உளுந்தூர்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
English summary
The People of western Viluppuram District demand for a Ulundurpet new district.
Story first published: Tuesday, September 9, 2014, 13:55 [IST]