அரசு லேப்டாப்புக்கு எதற்கு ஆதார் எண் - கொதித்த மாணவிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இலவச லேப்டாப்புக்கு ஆதார் எண் கேட்டதால் மாணவிகள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மேலரதவீதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு மாலை மாணவியருக்கு அரசின் இலவச லேப் டாப்கள் வழங்கப்பட்டன. இதனால் அங்கு மாணவியர், பெற்றோர் திரண்டனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவியருக்கு ஆதார் அட்டை எண் இருந்தால் மட்டுமே லேப்டாப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியரும், பெற்றோரும் அந்த தனியார் பள்ளிக்கு எதிராக வெகுண்டனர். இது குறித்து அனைத்து மாணவியர் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு மாணவியர், பெற்றோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். ஆனால் வேறு ஒரு பள்ளியில் ஆதார் எண் இல்லாமலேயே வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைத்து மாணவியருக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications