ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்தினேன் - இயக்குநர் கவுதமன் ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர உரிமை கிடைக்கும் வரை போராட வேண்டும் என்று இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ரத்தம் சிந்தினேன் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பழமையான விளையாட்டான "ஏறு தழுவுதல்" என்னும் ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறும். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த ஒருவாரகாலமாக இரவு பகலாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பணிந்த தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெற வகை செய்யும் சட்டம் நிறைவேற்றும் வகையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவனோபதி அம்பலத்தரசு, ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இயக்குநர் கவுதமன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்தி போராடினேன். இரவு பகலாக பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் போரடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர உரிமை கிடைக்கும் வரை போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய போது இயக்குநர் கவுதன் மீது போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications