மக்கள் உயிர்த்தியாகம் செய்ய கூடாது.. அறவழியில் செல்ல வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
போராட்டங்களின் போது மக்கள் அறவழியில் செல்ல வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: போராட்டங்களின் போது மக்கள் அறவழியில் செல்ல வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் காவேரி போராட்டம் குறித்து ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் ''காவிரி வாரியத்திற்காக சேலத்தை சேர்ந்த பிரபு தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டங்களின் போது மக்கள் உயிர் தியாகம் செய்ய கூடாது.'' என்றுள்ளார்.
மேலும் ''தீக்குளிப்பு, விஷமருந்துதல் போன்ற செயலில் மக்கள் ஈடுபட கூடாது. மக்கள் அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது.'' என்றுள்ளார்.
மேலும் ''கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து திமுக அறவழியில் போராடி வருகிறது. தமிழக மக்கள் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்க கூடாது'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications