ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொது மக்கள் சாலை மறியல்.. ஜோலார் பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஜோலார்பேட்டையில் பொது மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்: பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜோலார்பேட்டையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க கோரி ஜல்லிகட்டு ஆதரவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.