என் மீதான தாக்குதலுக்கு அவங்களுமா உடந்தை? இதுக்கு நான் சிறையிலேயே சாகிறேன்...பேரறிவாளன் 'ஷாக்'
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் சிறையில் தாம் தாக்கப்பட்டதற்கு சில நண்பர்களும் உடந்தையாக இருந்ததாக கிடைத்த தகவல்களால் பேரறிவாளன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். அவர் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் வேலூர் சிறையில் ராஜேஷ் கண்ணா என்ற கைதி பேரறிவாளனை இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது தாக்குதல் நடத்திய ராஜேஷ் கண்ணாவுக்கு தமது நண்பர்கள் சிலர் உதவியாக இருந்ததாக பேரறிவாளனிடம் கூறப்பட்டிருக்கிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பேரறிவாளன், நண்பர்களே இப்படி செய்யலாமா? பேசாமல் சிறையிலேயே செத்துவிடுகிறேன் என குமுறினாராம்.












Click it and Unblock the Notifications