தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் மோதல்.. போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம்
தூத்துக்குடி அண்ணாநகரில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: அண்ணாநகரில் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 வயதான 10ஆம் வகுப்பு மாணவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புகள் தீக்கிரையாயின.

போலீஸ் தடியடி
இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கமறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

துப்பாக்கிச்சூடு
இதையடுத்து தூத்துக்குடி அண்ணாநகர் ஏழாவது தெருவில் இன்று பிற்பகல் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இளைஞர் பலி
இதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் குண்டுவீச்சு
இந்நிலையில் அண்ணாநகர் 6வது தெருவில் தற்போது மீண்டும் மோதல் வெடித்தள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அண்ணாநகரில் பதற்றம்
இதனால் அந்த தெரு முழுவதும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. மீண்டும் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் அண்ணாநகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications