பெட்ரோல்-டீசல் விலை உயர்வு விண்ணை தொட்டது - ஓசூர், கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.54
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது. ஓசூர் மற்றும் கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.54க்கும், டீசல் விலை 73.12க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.29, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.37 காசுகள் என விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக உள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,பெட்ரோல் விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.37 காசுகளாகவும் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரியாக 18.46 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.47 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டன. கோவையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 77.29 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 69.37 காசுகளுக்கும் விற்கப்பட்டன.
திருவள்ளூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 77.29 காசுகளும், டீசல் 69.37 காசுகளும் விற்கப்பட்டு வருகின்றன. ஓசூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.54க்கும், டீசல் விலை 73.12க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.77.29 காசுகளாகவும் டீசல் 69.37 காசுகளாகவும் உள்ளன. கரூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.54 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 ஆகவும் காணப்படுகிறது.
பாஜகவின் இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் அதிகபட்சமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் இது கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைக் குறைத்து விட்டதால், இந்தக் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 74.06 டாலர்களுக்கு அதாவது ரூ.4,903.28க்கு விற்பனையாகிறது. இது கடந்த 2013ம் ஆண்டு 100 டாலர்களாக(ரூ.6,606) இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications