குமரி வந்த மோடிக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற ஆளுநர், முதல்வர்! ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு
நாகர்கோவில்: ஓகி புயலால் உருக்குலைந்து போன கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் பிரதிநிதிகளை வரவழைத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறுகிறார்.

இதையொட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முன்னதாக ஹெலிபேடில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

இதன்பிறகு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமரி மாவட்ட பாதிப்பு குறித்து விளக்கம் தெரிவித்தார். அதை பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். இதன்பிறகு விவசாயி மற்றும் மீனவர் பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications