புதிய புதுச்சேரி பிறக்கும் போது புதிய இந்தியா உருவாகும் - மோடி நம்பிக்கை

புதிய புதுச்சேரி பிறக்கும்போது புதிய இந்தியா உருவாகும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்துள்ளது- மோடி பெருமிதம்

    புதுவை: புதிய புதுவை பிறந்தால் மட்டுமே புதிய இந்தியா பிறக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    புதுவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் புதுவையில் சுற்றுலா, போக்குவரத்து, அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதலுக்கு ரூ1800 கோடி பயன்படுத்தலாம் . புதுவை குடிநீர் திட்டத்துக்காக பிரெஞ்ச் அமைப்பின் உதவியுடன் ரூ500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதுவை ஜிப்மர் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கடற்கரை ஒதுக்க ரூ100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உதான் திட்டங்கள் மூலம் சிறிய விமானங்கள் புதுவைக்கு இயக்கப்படுகிறது.

    PM Modi says about New India

    புதுவை சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். 12 லட்சம் மக்கள் வாழும் புதுவையில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு முத்ரா கடன் தரப்பட்டுள்ளது.

    முத்ரா கடன் திட்டத்தால் புதுவை இளைஞர்கள் பயனடைய வேண்டும்.

    கடற்கரை மேம்பாட்டுக்காக சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறைமுகங்களை பலப்படுத்துவதன் மூலம் மீனவர்களுக்கு உதவ முடியும்.
    நம் அனைவரது கனவும் புதிய இந்தியா என்பதுதான்.

    புதிய புதுச்சேரி உருவாகும் போது புதிய இந்தியா உருவாகும். ஒவ்வொரு நகரமும் கிராமமும் உறுதியாக இருந்தால் புதிய இந்தியா உருவாகும். புதிய புதுச்சேரியை உருவாக்க சபதம் ஏற்போம் வாருங்கள் என்றார் மோடி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+