உள்ளாட்சித் தேர்தலுக்கு பாமகவும் தயார்…. போட்டியிட விருப்பம் இருந்தால் மனு தரலாம்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான விரும்ப மனுக்களை வரும் 21ம் தேதியிலிருந்து கொடுக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவி முதல் மாநகராட்சி உறுப்பினர் பதவி வரை மொத்தம் 1,32,058 பதவியிடங்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பாமகவும் தயாராக இருக்கிறது.

எனவே, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் வரும் 21ம் தேதி புதன்கிழமை முதல் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை மொத்தம் 5 நாட்களுக்கு விருப்பமனுக்கள் பெறப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் வரும் புதன்கிழமை முதல் இம்மனுக்களை பெறுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி.கே மணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications