சிபிஐ ரெய்டு: அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க இன்னும் தயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி!
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வரும் நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வரும் நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டிய திமுக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெறும் நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு ஏன் இன்னும் தயக்கம் காட்டுகிறது என ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
குட்கா ஊழல் சிபிஐ சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க இன்னும் தயக்கம் ஏன்?
— Dr S RAMADOSS (@drramadoss) September 5, 2018