ஒரு சொட்டு மது கூட இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும்!
89. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றவுடன் மதுவிற்பனை 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதுபோதுமானதல்ல என்பதால், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
90. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது, பீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டு, மது ஆலைகள் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட உற்பத்தி செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
91. கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், குடிநோயர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

92. அனைத்து மக்களின் பெயர் விவரம், வயது உள்ளிட்ட தகவல்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசே தானாக நிதியுதவி வழங்கும். இதற்காக, எவரும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை
93. இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
94. தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்
95. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
96. கன்னியாகுமரி மாவட்டம் பசுமைச் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும்.
97. தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைத்த 12 ஸ்மார்ட் நகரங்களை (Smart City) விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
98. நகரங்களில் பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை (Wi-fi) வசதி செய்துத்தரப்படும்.
99. நகர்ப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
100. பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.












Click it and Unblock the Notifications