நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை புறக்கணித்தது பாமக! விடுதலை சிறுத்தைகள் முடிவு காரணமா?
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 19ம் தேதி நடக்கவுள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் புதுவையின் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். புதுவையில் உள்ள பல கட்சிகளிடமிருந்தும் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்கள்.
இந்நிலையில், நெல்லித்தோப்பு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று பாமக அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் போட்டியிடவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே, நெல்லித்தோப்பு தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி எளிதாக இடைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அப்படி வெற்றி பெற்றால், ஒருவகையில், விடுதலை சிறுத்தைகளிடம் பாமக தோற்றதை போலாகிவிடும் என்பதால் பாமக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications