உயிர் உடலில் இருக்கும் வரை
உயிர் உடலில் இருக்கும் வரை
'ஏங்கி நிற்கும் ஏழைகளைத் தாங்கி நிற்கும் பூமித் தாயே!
ஈரிலையில் வாழுகிற இன்னொரு கலைமகளே!
உலகம் உள்ள வரை கழகம் நிலைக்கும்!
கழகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைக்கும்!
இந்த உயிர் இந்த உடலில் நீடிக்கும் வரை 'அம்மா வாழ்க '
எனும் ஒற்றை வாசகம் ஓங்கி ஒலிக்கும்!
ஓங்கி ஒலிக்கும்!
நெஞ்சார்ந்த நன்றி
இத்தகைய ஆற்றல்மிகு தலைமையின் கீழ், அவரின் அறிவார்ந்த வழிகாட்டுதலின்படி, நிதியமைச்சராக ஐந்து நிதிநிலை அறிக்கைகளை இந்த மாமன்றத்தின் முன் வைக்கும் அரிய வாய்ப்பு கிடைத்ததை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பை எனக்கு அளித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி நேற்று தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர் செல்வம்.
இந்த கவிதை எல்லாம் நீங்களா எழுதுறீங்களா? இல்லை ஆள் வச்சு எழுதுறீங்களா மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம்?.