நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி கைது.. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதால் நடவடிக்கை
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்விற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த முருக பக்தர் பூரணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எம்.பி.ஏ பட்டதாரியான பூரணசந்திரன் மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர். ஆனால், இந்த நிகழ்விற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications