நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி கைது.. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதால் நடவடிக்கை
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்விற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த முருக பக்தர் பூரணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எம்.பி.ஏ பட்டதாரியான பூரணசந்திரன் மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர். ஆனால், இந்த நிகழ்விற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications