போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் சுவர் ஏறி குதித்து போலீஸார் ஓட்டம்
போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் போலீஸார் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ
தூத்துக்குடி: போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் போலீஸார் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

அப்போது பொதுமக்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கற்களை கொண்டு துரத்தியதால் போலீஸார் ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து மற்றொரு பகுதியில் குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸார் பொதுமக்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசினர். போராட்டக்காரர்கள் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். இதனால் தூத்துக்குடியே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications