விநாயகர் சிலை கரைப்பதில் மோதல் - சங்கரன்கோவிலில் போலீஸ் தடியடி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விநாயகர் சிலையை குறிப்பிட்ட வழியில் செல்ல அனுமதிக்காததால் போலீசாருக்கும் இந்து முன்னியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்காக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 23 இடஙகளில் விநாயகர் சிலை பிரதிஷ்சை செய்யப்பட்டிருந்தது. விநாயர் சிலைகள் அனைத்தும் நேற்று மாலை இருந்தே ஒவ்வொன்றாக சங்கரநாராயணசாமி கோவிலில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது.
சங்கரன்கோவிலில் 19வது வார்டுக்கு உட்பட்ட பாட்டத்தார் மற்றும் காமராஜர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை இந்து முன்ணனி நகர தலைவர் ஜீவராஜ் தலைமையில் நிர்வாகிகளும், பொதுமக்களும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அப்போது காந்தி நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுப்பதற்காக அனைவரும் வந்தபோது போலீசார் விநாயகர் சிலை ஊர்வலத்தை கெளரிசங்கர் தியேட்டர் வழியாக செல்லுமாறு கூறினர். இதற்கு இந்து முன்னனி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கழுகுமலை சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் மாதவன், வானுமாமலை, டவுன் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சாலையில் அமர்ந்திருந்த இந்து முன்னனி நிர்வாகிகள் 4 பேரை அடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கழுகுமலை சாலையில் திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டது.
போலீசார் காந்தி நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்புறப்படு்த்த முயன்றனர். இதனை தடுத்த பொதுமக்கள் பிடித்து சென்ற இந்து முன்னனியினரை விடுவி்த்தால் மட்டுமே சிலையை எடுக்க விடுவோம் என்று தெரிவித்து விட்டனர். இதனால் 4 பேரையும் விடுவித்தனர். இதனால் கழுகுமலை சாலையில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.