நெடுவாசலுக்குள் நுழைய போலீஸ் தடை - சோதனையை தாண்டி குவிந்த 70 கிராம மக்கள்
நெடுவாசல் கிராமத்திற்குள் நுழைய போலீஸ் தடை விதித்த நிலையில் தடையை மீறி 70 கிராம மக்கள் குவிந்துள்ளனர்.
புதுச்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு வரும் போராட்டக்குழுவினரை 7 சோதனை சாவடி அமைத்து போலீசார் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. தடையை மீறி நெடுவாசலில் குவிந்த 70 கிராம மக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அனுமதி அளித்தது.
இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசல் போராட்டம்
நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. நெடுவாசலில் கடந்த 12 நாட்களாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு
பயிர்கள் நன்கு செழித்து வளரும் விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பும் போராட்டக் களத்தில் உள்ளன. கடந்த 12 தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் தடை
திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் 70க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர்.
ஆலோசனைக்கூட்டம்
போலீஸ் தடையைத் தாண்டி இன்று இன்று நெடுவாசலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 2,000 பேர் பங்கேற்றனர். அடுத்தகட்டமாக அமைதியான முறையில் போராடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.