நெடுவாசலுக்குள் நுழைய போலீஸ் தடை - சோதனையை தாண்டி குவிந்த 70 கிராம மக்கள்
நெடுவாசல் கிராமத்திற்குள் நுழைய போலீஸ் தடை விதித்த நிலையில் தடையை மீறி 70 கிராம மக்கள் குவிந்துள்ளனர்.
புதுச்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு வரும் போராட்டக்குழுவினரை 7 சோதனை சாவடி அமைத்து போலீசார் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. தடையை மீறி நெடுவாசலில் குவிந்த 70 கிராம மக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அனுமதி அளித்தது.
இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் போராட்டம்
நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. நெடுவாசலில் கடந்த 12 நாட்களாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு
பயிர்கள் நன்கு செழித்து வளரும் விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பும் போராட்டக் களத்தில் உள்ளன. கடந்த 12 தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் தடை
திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் 70க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர்.

ஆலோசனைக்கூட்டம்
போலீஸ் தடையைத் தாண்டி இன்று இன்று நெடுவாசலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 2,000 பேர் பங்கேற்றனர். அடுத்தகட்டமாக அமைதியான முறையில் போராடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications