தனுஷ்கோடி அருகே ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை!
தனுஷ்கோடி அருகே ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக் காலமாக கடல் வழியே கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்
தனுஷ்கோடி : தனுஷ்கோடி அருகே ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக் காலமாக கடல்வழியே கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. இதனால் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தனுஷ்கோடியை அடுத்த உள்ளது கம்பிப்பாடு கடற்கரை. இங்கிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1கோடியை 40 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை தனுஷ்கோடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கஞ்சா கடத்தல்காரர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கடல்வழியாக அதுவும் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை வழியாகவே கஞ்சா கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக கம்பிப்பாடு கடற்கரையில், மர்மப்பொருள் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், மர்மப்பொருளை கைப்பற்றி, அதிலிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.