தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் மகன் மீது எப்ஐஆர் பதிவு: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபாலின் மகன் சந்தோஷ்குமார் காவல்துறையினரின் தொடர் விசாரணைக்கு ஆஜராகாததால் 174 ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்து கிடுக்குப்பிடி விசாரணை
காஞ்சிபுரம்: தலைமறைவாக உள்ள பிரபல கள்ளச் சாராய வியாபாரியும் தாதாவுமான காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபாலின் மகன் சந்தோஷ் குமார் லண்டன் நாட்டில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்தார். அவரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை செய்தது.
பின் சிபிசிஐடி எஸ்.பி .ஸ்ரீநாதா தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டு கடந்த 9ந்தேதி காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து சந்தோஷ் குமாரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.
இதன் பின் தொடர் விசாரணைக்கு சந்தோஷ் வரவில்லை. இதனால் ஸ்ரீதர் வீட்டில் சம்மன் ஒட்டபட்டது. சந்தோஷ்குமாருக்கு சம்மன் அளித்தும் ஆஜராகாமல் தலைமறைவானதால் நீதிமன்ற ஆணை பெற்று எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, சந்தோஷ்குமார் மீது 174 ஐபிசி பிரிவில் வழக்கு.(எப்ஐஆர் ) பதியப்பட்டது.
இதனால் அச்சமுற்ற சந்தோஷ்குமார் உயர்நீதி மன்றத்தில் ரிட் , குவாஷ் ஆகிய இரண்டு பெட்டிஷன்களை தாக்கல் செய்த பின்னர் நேற்று மூன்றாவது கட்ட விசாரணைக்கு உடன்பட்டார். அவரிடம் மாவட்ட தனிப்படை ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான குழு காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இடைவிடாமல் விசாரணை நடத்தியது.
சந்தோஷ்குமாரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு 80 சதவிதம் தெரியாது என்றும் சில கேள்விகளுக்கு ஓரிரு வரியில் எழுத்து பூர்வமாகவும் , வாய்மொழியாகவும் சந்தோஷ் குமார் பதிலளித்தார்.
அவர் கூறியதில் இருந்து துபாய் நாட்டில் ஸ்ரீதர் தனபாலின் மனைவி குமாரி செல்போன் கடை வைத்துள்ளதாகவும் , அதன் அடிப்படையில்தான் ஸ்டூடன்ஸ் விசா பெறபட்டதாகவும் , விசா நீட்டிப்பதற்காக விசாரணைக்கு ஆஜராகாமல் பிரிட்டன் தூதரகம் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 2016ல் இருந்து ஸ்ரீதர் தனபாலின் அடாவடி நடவடிக்கையிலும் , ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்த முழு விசாரணையும் சந்தோஷ்குமார் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் சந்தோஷ்குமாரிடம், மாவட்ட தனிப்படை காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான குழுவும் விசாரணையை துவங்கியுள்ளது. இதில் சந்தோஷ்குமாரிடம் பல கிடுக்குப்பிடியான கேள்விகள் கேட்கப்படும் என்பதால் சந்தோஷ்குமார் அச்சத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications