For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் வீடுவீடாய் காவல்துறையினர் சோதனை

Google Oneindia Tamil News

வேலூர்: சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் காவல்துறையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர்.

சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, தனது கூட்டாளிகள் இருவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தங்கியிருப்பதாக ஜாகர் உசேன் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, காட்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கியூ பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர். மேலும், காட்பாடி ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் சிக்கிய கவுகாத்தி ரயில், அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்தும் மற்றும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

English summary
Police searched ISI agent Zakir Husain’s associates in Vellore homes. They are searching all of the homes in Vellore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X