+2 விடைத்தாள் திருத்தும் பணி 11ம் தேதி முதல் துவக்கம்- நெல்லை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பிளஸ்டூ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளன.
நெல்லை: பிளஸ்டூ தேர்வு முடிந்ததால் மையங்களில் விடைத்தாள் கட்டுகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் 1ம்தேதி துவங்கி தற்போது முடிந்து விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு வினாக்கள் யோசித்து எழுதும் அளவுக்கு இருந்ததாகவும், இதில் உயிரியல், பொருளாதார தேர்வுகள் மட்டும் கஷ்டமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்திருந்தனர். இந்த பாடங்களில் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தேர்வுகள் முடிந்து விட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட விடைத்தாள் மையத்திற்கு கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வருகிற 11ம் தேதி முதல் முதல் நிலை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள் திருத்துகின்றனர். பின்னர் பிற ஆசிரியர்களும் அதன் பின்பு இதில் இணைந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு முதலிலேயே பிற பாடங்களுக்கு தாள்களை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதலில் மொழி பாட தாள்கள் தான் திருத்தப்பட்டது. இந்நிலையில் மாலை முதல் பிளஸ்டூ விடைத்தாள் கட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மையங்களுக்கு வந்து சேர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாளை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்காசி வேலாயுத நாடார் மெட்ரிக் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் சொந்த மாவட்டத்தை தவிர வேறு பகுதி மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் தான் திருத்தப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறைகேட்டை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications