அரசியல் சதியால் தான் பதவி இழக்க நேரிட்டது.. இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா உருக்கம்..
சென்னை: அரசியல் சதியால் தான் முதல் அமைச்சராக இல்லாத சூழல் ஏற்பட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். தனது அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார்.
அரசியல் சதியால் தான் தனது முதலமைச்சர் பதவி பறிபோனதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதுதான் தனது லட்சியம் என்றும், அதற்கு வாக்காளர்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
அதிமுக செய்த மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வதாக கூறிய அவர், தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின் வெட்டே இல்லை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.கே நகரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா கூறினார்.
இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், சமூக பாதுகாப்பு திட்டத்திங்களின் கீழ் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நலன் பெற்றுள்ளதாகவும் ஜெயலலிதா கூறி வாக்கு சேகரித்தார்.