சசிகலா புஷ்பாவுக்கு எதிராக கண்டன போஸ்டர் - பரபரப்பு
நெல்லை: ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு எதிராக நெல்லையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா எம்பி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அதிமுகவை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

சசிகலா புஷ்பாவை கண்டித்து சென்னையில் பல முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் இளைஞரணி, நெல்லை மற்றும் தூத்துக்குடி, ஆறு ப்ங்கு நட்டார், நாங்குநேரி, தூத்துக்குடி என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுளளது. இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications